என்னை இமைக்க வைத்ததும் நீ தான்..
என்னை இயக்கி வைத்ததும் நீ தான்..
கண்மூடி கனவினிலும் நீ தான்..
கண்விழிக்க எதிரிலும் நீ தான்..
என்னை பேச வைப்பதும் நீ தான்..
ஊமையாய் மாறவைப்பதும் நீ தான்..
என்னை சிந்திக்க வைப்பதும் நீ தான்..
என்னை சிரிக்க வைப்பதும் நீ தான்..
என்னை தொலைக்க வைத்ததும் நீ தான்..
என்னை தேட வைத்ததும் நீ தான்..
என்உயிர் துடிக்க வைத்ததும் நீ தான்..
என்துயர் துடைக்க வைத்ததும் நீ தான்..
என் ஹோர்மொன்களை சுரக்க வைப்பதும் நீ தான்..
மனதில் ஹார்மொனியும் வசிக்க வைப்பதும் நீ தான்..
இப்படி கிறுக்க வைத்ததும் நீ தான்..
உன்மேல் கிறுக்கனாய் மாற வைத்ததும் நீ தான்..
No comments:
Post a Comment