கண்ணிரண்டும் கயல் விழி,
காதல் பேசும் பன்மொழி,
இவை அறிந்துகொள்ளும் ஒரே வழி,
இக்கவியை படியடி உன் விழிவழி...
அகத்தின் அழகி,
அன்பால் பழகி,
என் ஜகத்தினை வெல்லும்,
அவள் கன்னக்குழி...
அன்பு தோழி, பேசும் மொழி,
இனிக்கும் சொற்களின் தேன்துளி,
மனம் மணக்கும் மழைத்துளி
மணம் முடிக்க அருள் பொழி,
பௌர்ணமியின் முழுமதி
பெண்ணினத்தின் அதிபதி,
என்செய்யும் உந்தன் சதி,
நீதானடி எந்தன் திருமதி..
No comments:
Post a Comment