மஞ்சள் நிற ஆடை,
சாயம் பூசிய கன்னங்கள்,
மயக்கும் விழிகள்,
செர்ரி நிற உதடுகள்
புன்னகையுடன் நலம் விசாரித்து,
மாய உலகத்தினுள் வரவேற்றாள்,
விமான பணிப்பெண்..
என் உடமைகளை பத்திரமாக,
எதுத்து வைத்தன அவளின் இருகைகள்,
எனக்கென காத்திருந்த,
ஜன்னலோர என் இருக்கைகள்,
அதை காட்டிவிட்டு, விடை பெற்றாள்..
இருக்கையில் அமர்ந்து, ரசித்தேன்
அழகான விமான பறவைகளை,
சிறகு விரித்த பறவைகளை,
சீறி பாயும் பறவைகளை,
சீராய் நிற்கும் பறவைகளை,
காற்றில் அசைந்து நடனமிடும் பறவைகளை,
மனிதனால் இயக்கும் பறவைகளை,
மனிதனை சுமக்கும் பறவைகளை,
அந்த சிறிய ஜன்னலின் வழியே,
கண்டு நான் களித்திருக்க...
என் கவனம் சிதைக்கும் வன்னம்,
யாரோ என்னை தூரத்தில்
அழைப்பது போன்றதொரு உணர்வு..
இறந்த கால நினைவுகளை,
அசை போட வைத்தது...
காலச்சக்கரத்துக்குள் நுழைந்து,
பின்னோக்கி செல்கிறேன்,
என் இளமை காலத்திற்குள்...
பரங்கிமலை,
அது தான் என் பொதிகை மலை..
சிறிய குன்று தான்,
பல நாட்கள்,
அதன் சிகரத்தில் நின்று,
இந்த நகரத்தின் அழகை
கண்டு ரசித்ததுண்டு..
வான்நோக்கி கூச்சலிட்டு என்குரளின்,
எதிரொலியை கேட்டு ரசித்ததுண்டு...
தாமஸ் மலையின் ஆலய மணிஓசை,
கேட்டுக்கொண்டே இயற்கையை ரசித்ததுண்டு...
அதன் அடிவாரத்தில் நின்று
நான் விளையாடியதும் உண்டு..
நான் தொட்ட முதல் சிகரமது,
என்னை அழைத்த முதல் சொர்கமுமது,
விமான விருந்தினர்கள்,
வந்து செல்வதை,
வேடிக்கை பார்க்க,
கேளிக்கை வரி கேட்காத,
பார்வையாளர்களின் கூடம்,
அந்த ஆலமரம்...
வெயிலில் நிழலாக,
மழையில் குடையாக,
எத்தனையோ நாட்கள்,
என்னை பாதுகாத்தது,
அந்த ஆலமரம்...
விருந்திற்கு வரும்,
விமானங்களை, நான்
புன்னகையுடன் வரவேற்றும்,
கை அசைத்து வழியனுப்பியும்,
விளையாடும் வரவேர்பறை,
அந்த ஆலமரம்...
ஆயிரம் ஆயிரம் கனவுகள்,
கண்ணில் பறந்து கொண்டு,
நிஜங்களாக வாழ்ந்து கொண்டிருந்த,
எனக்கு ஆதரவாக,
அந்த ஆலமரம்..
மலையின் உச்சியில்,
இருந்ததே அந்த ஆலமரம்...
மகிழ்ச்சியின் உச்சியில்,
இருந்ததே என் இளமை காலபருவம்...
இறந்த காலத்திற்குள் சென்று,
நினைவுகளை மீட்டு வந்தேன்...
காலசுழர்ச்சியின் வேகத்தில் சிக்கி,
சிதைபடுகின்றன நம் நினைவுகள்..
விமானம், காற்றுடன் போட்டியிட்டு,
விண்ணை தாண்ட, பறக்க தொடங்கின..
இருக்கையை பற்றிக்கொண்டு,
ஜன்னல்வழியே பார்த்துக்கொண்டிருந்தேன்...
தன் கிளைகளை அசைத்தும் ஆட்டியும்,
என்னை விடை கொடுத்து,
வழி அனுப்பிவிட்டு நின்றது,
அந்த ஆலமரம்,
அனாதையாய்...
இந்த மனிதன்,
இன்று நிஜத்தில் பறந்தாலும்,
இன்னும் கனவில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான்..
கனவுகளை நிஜமாக்கும் முயற்சியில்,
நிஜங்களை மதிக்காமல் மறந்து போகிறான்..
எத்தனை மாற்றங்கள் இந்த மனிதனுக்குள்,
எத்தனை மாற்றங்கள் நம் கனவுகளுக்குள்,
எத்தனை மாற்றங்கள் நம் நிஜங்களுக்குள்,
மாறாமல் இருந்தது,
மறக்காமல் இருந்தது,
அந்த ஆலமரம் மட்டுமே,
இந்த மனிதன் அல்ல..
அந்த ஆலமரத்தின்,
தென்றல் காற்றின் சுகத்தை,
மனதில் சுமந்து கொண்டும்,
இறந்த கால நினைவுகளை,
இறக்க விடாது நினைவில் கொண்டும்,
விடை கொடுத்தவாறே,
வானில் பறக்கிறேன்....