Monday, September 13, 2010

மணம் நாட ஒரு உரையாடல்...

கண்ணிரண்டும் கயல் விழி,
காதல் பேசும் பன்மொழி,
இவை அறிந்துகொள்ளும் ஒரே வழி,
இக்கவியை படியடி உன் விழிவழி...

அகத்தின் அழகி,
அன்பால் பழகி,
என் ஜகத்தினை வெல்லும்,
அவள் கன்னக்குழி...

அன்பு தோழி, பேசும் மொழி,
இனிக்கும் சொற்களின் தேன்துளி,
மனம் மணக்கும் மழைத்துளி
மணம் முடிக்க அருள் பொழி,

பௌர்ணமியின் முழுமதி
பெண்ணினத்தின் அதிபதி,
என்செய்யும் உந்தன் சதி,
நீதானடி எந்தன் திருமதி..

நிறமில்லா ஒரு வானவில்

உறக்கமில்லை விழியில்,
போவதெந்த வழியில்
வெளிச்சமில்ல நிலவில்
நிறமில்லா ஒரு வானவில்
நீயில்லாததென் வாழ்வில்...

நீ தான்..

என்னை இமைக்க வைத்ததும் நீ தான்..

என்னை இயக்கி வைத்ததும் நீ தான்..

கண்மூடி கனவினிலும் நீ தான்..

கண்விழிக்க எதிரிலும் நீ தான்..

என்னை பேச வைப்பதும் நீ தான்..

ஊமையாய் மாறவைப்பதும் நீ தான்..

என்னை சிந்திக்க வைப்பதும் நீ தான்..

என்னை சிரிக்க வைப்பதும் நீ தான்..

என்னை தொலைக்க வைத்ததும் நீ தான்..

என்னை தேட வைத்ததும் நீ தான்..

என்உயிர் துடிக்க வைத்ததும் நீ தான்..

என்துயர் துடைக்க வைத்ததும் நீ தான்..

என் ஹோர்மொன்களை சுரக்க வைப்பதும் நீ தான்..

மனதில் ஹார்மொனியும் வசிக்க வைப்பதும் நீ தான்..

இப்படி கிறுக்க வைத்ததும் நீ தான்..

உன்மேல் கிறுக்கனாய் மாற வைத்ததும் நீ தான்..

Sunday, June 14, 2009

கனவுகளும்!! நிஜங்களும்!! Part - 2

மஞ்சள் நிற ஆடை,
சாயம் பூசிய கன்னங்கள்,
மயக்கும் விழிகள்,
செர்ரி நிற உதடுகள்
புன்னகையுடன் நலம் விசாரித்து,
மாய உலகத்தினுள் வரவேற்றாள்,
விமான பணிப்பெண்..

என் உடமைகளை பத்திரமாக,
எதுத்து வைத்தன அவளின் இருகைகள்,
எனக்கென காத்திருந்த,
ஜன்னலோர என் இருக்கைகள்,
அதை காட்டிவிட்டு, விடை பெற்றாள்..

இருக்கையில் அமர்ந்து, ரசித்தேன்
அழகான விமான பறவைகளை,
சிறகு விரித்த பறவைகளை,
சீறி பாயும் பறவைகளை,
சீராய் நிற்கும் பறவைகளை,
காற்றில் அசைந்து நடனமிடும் பறவைகளை,
மனிதனால் இயக்கும் பறவைகளை,
மனிதனை சுமக்கும் பறவைகளை,
அந்த சிறிய ஜன்னலின் வழியே,
கண்டு நான் களித்திருக்க...

என் கவனம் சிதைக்கும் வன்னம்,
யாரோ என்னை தூரத்தில்
அழைப்பது போன்றதொரு உணர்வு..
இறந்த கால நினைவுகளை,
அசை போட வைத்தது...

காலச்சக்கரத்துக்குள் நுழைந்து,
பின்னோக்கி செல்கிறேன்,
என் இளமை காலத்திற்குள்...

பரங்கிமலை,
அது தான் என் பொதிகை மலை..
சிறிய குன்று தான்,
பல நாட்கள்,
அதன் சிகரத்தில் நின்று,
இந்த நகரத்தின் அழகை
கண்டு ரசித்ததுண்டு..
வான்நோக்கி கூச்சலிட்டு என்குரளின்,
எதிரொலியை கேட்டு ரசித்ததுண்டு...
தாமஸ் மலையின் ஆலய மணிஓசை,
கேட்டுக்கொண்டே இயற்கையை ரசித்ததுண்டு...
அதன் அடிவாரத்தில் நின்று
நான் விளையாடியதும் உண்டு..
நான் தொட்ட முதல் சிகரமது,
என்னை அழைத்த முதல் சொர்கமுமது,

விமான விருந்தினர்கள்,
வந்து செல்வதை,
வேடிக்கை பார்க்க,
கேளிக்கை வரி கேட்காத,
பார்வையாளர்களின் கூடம்,
அந்த ஆலமரம்...

வெயிலில் நிழலாக,
மழையில் குடையாக,
எத்தனையோ நாட்கள்,
என்னை பாதுகாத்தது,
அந்த ஆலமரம்...

விருந்திற்கு வரும்,
விமானங்களை, நான்
புன்னகையுடன் வரவேற்றும்,
கை அசைத்து வழியனுப்பியும்,
விளையாடும் வரவேர்பறை,
அந்த ஆலமரம்...

ஆயிரம் ஆயிரம் கனவுகள்,
கண்ணில் பறந்து கொண்டு,
நிஜங்களாக வாழ்ந்து கொண்டிருந்த,
எனக்கு ஆதரவாக,
அந்த ஆலமரம்..

மலையின் உச்சியில்,
இருந்ததே அந்த ஆலமரம்...
மகிழ்ச்சியின் உச்சியில்,
இருந்ததே என் இளமை காலபருவம்...

இறந்த காலத்திற்குள் சென்று,
நினைவுகளை மீட்டு வந்தேன்...
காலசுழர்ச்சியின் வேகத்தில் சிக்கி,
சிதைபடுகின்றன நம் நினைவுகள்..

விமானம், காற்றுடன் போட்டியிட்டு,
விண்ணை தாண்ட, பறக்க தொடங்கின..
இருக்கையை பற்றிக்கொண்டு,
ஜன்னல்வழியே பார்த்துக்கொண்டிருந்தேன்...

தன் கிளைகளை அசைத்தும் ஆட்டியும்,
என்னை விடை கொடுத்து,
வழி அனுப்பிவிட்டு நின்றது,
அந்த ஆலமரம்,
அனாதையாய்...

இந்த மனிதன்,
இன்று நிஜத்தில் பறந்தாலும்,
இன்னும் கனவில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான்..
கனவுகளை நிஜமாக்கும் முயற்சியில்,
நிஜங்களை மதிக்காமல் மறந்து போகிறான்..

எத்தனை மாற்றங்கள் இந்த மனிதனுக்குள்,
எத்தனை மாற்றங்கள் நம் கனவுகளுக்குள்,
எத்தனை மாற்றங்கள் நம் நிஜங்களுக்குள்,
மாறாமல் இருந்தது,
மறக்காமல் இருந்தது,
அந்த ஆலமரம் மட்டுமே,
இந்த மனிதன் அல்ல..

அந்த ஆலமரத்தின்,
தென்றல் காற்றின் சுகத்தை,
மனதில் சுமந்து கொண்டும்,
இறந்த கால நினைவுகளை,
இறக்க விடாது நினைவில் கொண்டும்,
விடை கொடுத்தவாறே,
வானில் பறக்கிறேன்....

கனவுகளும்!! நிஜங்களும்!! Part - 1

பரபரப்பான நகரத்தில்,
சுறுசுறுப்பான காலைநேரத்தில்,
ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்து செல்லும்,
தாரை தாரையை வாகன ஊர்திகள்...

கதர் சட்டையும், கறுக்கி போகும்,
அளவில் புகையை கக்கி கொண்டுஇருக்கும்..
வாகனங்களை வேடிக்கையாய்,
பார்த்துகொண்டிருந்தவனாய் நான்..

"நன்றி மீண்டும் வருக!" என்று
நீல நிற பலகையில் எழுதி இருக்க,
சிங்கார சென்னை,
என்னை சென்று வா என்றது..

சிங்காரம்,
நான் அணிந்திருந்த ஆடையில் இல்லை,
அருகில் இருந்த அன்னையின்
அழுகையில் இட்டு இருந்தது..

சிங்காரம்,
நான் பூத்திருந்த புன்னகையில் இல்லை,
வெளிநாட்டில் வேலையென்று எந்தன் பெருமை
பாடும் தந்தையின் பாட்டில் இருந்தது..

சிங்காரம்,
நான் வந்துகொண்டிருந்த நகர வீதிகளில் இல்லை,
பிரியா விடை கொடுக்க வரும்,
பிரியமானவர்களின் விழிகளில் ஒளிந்திருந்தது..

ஒய்யாரமாய், இத்தனையும்,
ரசித்தவனாய்,
வந்து அடைந்தேன்...

மீனம்பாக்கம்,
சென்னையின் விமான நிலையம்,

விமானங்களின் வேடந்தாங்கல்,
இயந்திர பறவைகளின் சரணாலயம்,
விருந்தினர்களாக வந்து செல்லும்
விமானங்களுக்கு விருந்து படைக்கும்,
விருந்தினர் மாளிகை...

பல பல மனிதர்கள்,
பல பல மொழிகள்,
பல பல நாட்டினர்கள்,
பள பளக்கும் விமானகள்,
விசித்ர மனிதர்களின் வினோத,
வழி அனுப்புதலும் ,
வர வேர்ப்புக்களும்,
அரங்கேறி கொண்டிஇருக்க..

சிலரின் கண்ணில் கண்ணீர் துளிகள்,
சிலரின் இதழில் புன்னகை துளிகள்..
திருவிழா கூட்டத்தின் உற்சாகம்,
இரங்கல் கூட்டத்தின் மௌனம்,
இரண்டும் கலந்திருந்த இடம் அது...

அறிவுப்பு பலகை, நான்
பறக்கவிருக்கும் பறவையின் பெயரையும்,
விடை பெரும் நேரத்தை குறித்தது,

நிகழ்கால கனவுகளோடு
வரும்காலத்தில் நிஜாங்கலாக்க புறப்பட்டேன்...

வெள்ளையனிடம் வாங்கிய சுதத்திரத்தை இங்கயே அடகு வைத்து,
மீண்டும் அந்நியனிடம் அடிமையாக புறப்பட்டேன்..

நம்நாட்டில் இருந்து அள்ளி சென்ற செல்வங்களில்,
கொஞ்சம் மீட்டு வர நானும் புறப்பட்டேன்..

அந்நிய நாட்டிற்க்கு சென்று, நம்நாட்டின்
அந்நிய செலாவணியை அதிகரிக்க புறப்பட்டேன்...

அனைவரிடமும் விடை பெற்றவனாய்,
என் எதிர்காலம் கேட்டிடும் கேள்விகளுக்கு,
விடை தெரியாமல், விடை தேடி புறப்பட்டேன்..

விஞ்யானத்தில் மனிதன் கண்டெடுத்த
ராட்சச பறவையின் முதுகில் ஏறி புறப்பட்டேன்..

திசை மாற்றிய தருணம்..

காற்றில் ஈரப்பதம் ஒட்டிருந்த போதிலும்,
எச்சில் வரண்டுபோன தருணம்,
தமிழ் அகராதி அருகில் இருந்த போதிலும்,
வார்த்தைகள் தொலைந்தபோன தருணம்,
ஐந்து மொழிகள் தெரிந்திருந்த போதிலும்,
மொழிகள் ஊமையாகி போன தருணம்,
அவள் கூர்மையான கண்கள் என்னிடம்
மௌனம் மட்டுமே பேசிய தருணம்,

NO SMOKING Pls....

புகையை பிடித்தது அவனது இதழ்கள்,
புகையை வெறுத்தது அவனது இருதயம்.

பகையாய் ஆனது அவனது உடல்,
இரையை போனது அவன் ஈரல்.

புகையாய் கரைந்தான், காற்றினில்,
புன்னகையாய் சிரித்திருந்தான், புகைபடதினில்...