அன்னையே, என்னையே,
தாங்கினாய் உன் கருவிலே..
தாய்மையே, பெற்றியே,
குழந்தையை கருவறையிலே..
பிறப்பையே, கொடுத்தியே,
பிச்சையாய் என்னை இப்புவியிலே..
திண்ணையே, என்னையே,
ஏற்றினாய் உன் மடியிலே...
அட்சையே, உண்ணவே,
பால்புகட்டினாய் உன் மார்பிலே....
தாளமே, கையிலே,
தட்டினாய் என் நெஞ்சிலே..
நாதமே, இசையிலே,
உறங்கவைத்தாய் உன் தாலாட்டிலே....
உறக்கமே, கண்ணிலே,
விழித்திருந்தாய் நடு இரவிலே...
கனாவே, கண்ணிமயே,
பாதுகாத்தாய் என்னையுன் இரு கண்ணிலே...
உதயமே, அருகிலே,
காத்திருந்தாய் என்கண் விழிப்பிலே..
முத்தமே, அதிகாலையே,
மழைபொழிந்தாய் என் கண்ணிலே..
நித்தமே, நின்னையே,
மெய்மறந்தாய் என் சிரிப்பிலே..
உன்னையே, அழைக்கவே,
கற்பித்தாய் ஓர் நொடியிலே...
அழுகையே, என்னிலே,
அறிந்துகொண்டாய் அக் கணத்திலே..
அமுதமே, நிலவிலே,
ஊட்டினாய் உன் கையிலே...
நடக்கவே, பழக்கியே,
கண்டுகளிதாய் என் நடையையே...
காயமே, பட்டதே,
வருந்தினாய் உன் நெஞ்சிலே...
பேசவே, நினைக்கவே,
புரிந்துகொள்வாய் என் மனதையே...
ஏட்டிலே, எழுதியே,
பழக்கினாய் உன் பெயரையே..
பெண்மையே, உண்மையே,
புரியவைத்தாய் உன் அன்பிலே...
என்னுலகமே, உழவுதே,
இந்த ஒற்றை சொல்லிலே..
அம்மா...
No comments:
Post a Comment