Saturday, June 13, 2009

காரணம்? கருமை...

கார்முகில் கூந்தல்,
கண்ணின் கருமணி,
இமையிலிடும் கண்மை,
இதழொர மச்சம்,
தாயின் கருவரை,
தித்திக்கும் கட்டிகரும்பு,
இனிக்கும் கருப்பட்டி,
கூவுகின்ற இசைகுயில்,
கரிசல்காட்டு மண்,
கருமையான இவையனைத்தும்,
உனக்கு பிடித்திருக்கையில்...
கருப்பான என்னை மட்டும் ஏன் ஒதுக்கினாய்?
என் கருநிறதை கண்டு பிடிக்கவில்லையென்று..

No comments:

Post a Comment